×

வீடு புகுந்து நகை திருட்டு

நெல்லை, செப்.4: நெல்லை மாவட்டம் பழவூர் மதகநேரியைச் சேர்ந்தவர் சுந்தர்மணி. இவரது மனைவி சுபாஷினி(34). இவரது தாயாரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுபாஷினி அதே பகுதியில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த அவரது தாய், கதவை பூட்டாமல் அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். இந்நிலையில் கடந்த 2ம்தேதி சுபாஷினி பீரோவில் உள்ள நகைகளை பார்த்த போது 6 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.25 லட்சமாகும். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்கு பதிந்து நகைகள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வீடு புகுந்து நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sundarmani ,Palavur Madaganeri ,Subashini ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...